NEWS
சர்வதேச சிறுவர் தினம்
முன்பள்ளி சிறுவர் விளையாட்டு விழா – 2011
யாழ்ப்பாணத்தில் நாவாந்துறைப் பகுதியில் அமைந்துள்ள புனித நீக்கிலார் முன்பள்ளி நிறார்களுடைய விழையாட்டு விழா 08.07.2011 வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பொதுவாக வன்னியில் இடம்பெற்ற இறுதிப் போரினால் குடும்பங்கள் சின்னாபின்னமாகி, பெற்பெற்றோரை இழந்து அகதிகளாக, அனாதைகளாக மீண்டும் வாழ்வோம் என்ற மன உறுதியோடு எமது தாயகத்தில் நிறைவான நிகழ்வை நடத்தியிருக்கிறார்கள்.
நடத்தியவர்கள் புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்கள். மக்கள் மனதில் எவ்வித பாதிப்புக்கள் இருந்த போதிலும் இவ்வாறான மனதுக்கு மகிழ்வட்டும் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் மட்டுமல்ல பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். த்றபோதெல்லாம் சிறுவர் துஸ்பிரயோகம், பாடசாலையிலிருந்து சிறுவர்கள் இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் பற்றி அதிகமாக பேசுகின்றோமே தவிர சிறுவர்களை மகிழ்விற்பதற்கான நிகழ்வை நடத்துவதைப் பற்றி பேசுவதை மறந்து விடுகின்றோம்.
நடத்தியவர்கள் புனித நீக்கிலார் முன்பள்ளி சிறார்கள். மக்கள் மனதில் எவ்வித பாதிப்புக்கள் இருந்த போதிலும் இவ்வாறான மனதுக்கு மகிழ்வட்டும் நிகழ்வினால் பாதிக்கப்பட்ட சிறார்கள் மட்டுமல்ல பெற்றோரும் மகிழ்ச்சி அடைகின்றனர். த்றபோதெல்லாம் சிறுவர் துஸ்பிரயோகம், பாடசாலையிலிருந்து சிறுவர்கள் இடைவிலகல், சிறுவர்களை வேலைக்கு அமர்த்துதல் பற்றி அதிகமாக பேசுகின்றோமே தவிர சிறுவர்களை மகிழ்விற்பதற்கான நிகழ்வை நடத்துவதைப் பற்றி பேசுவதை மறந்து விடுகின்றோம்.
நிறுவர்களுடைய மகிழ்வான வாழ்க்கை பற்றி ஒவ்வொருவரும் சிந்திக்க வேண்டும். அவர்களின் மனங்களைக் குளிர வைக்கும் மகிழ்களங்களை அமைத்துக் கொடுக்கவும் பல விளையாட்டு விழாக்கள், கலை நிகழ்வுகள், சிறுவர் கொண்டாட்டங்கள், வேடிக்கை விநோத நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தி அவர்களின் மனங்களை மகிழ்விக்கக் கூடிய வகையில் உற்சாகப்படுத்தவும், உத்வேகத்துடன் செயலாற்றும் செயற்பாடுகளை ஊக்குவிக்கவும் ஒவ்வொருவரும் முன்வர வேண்டும்.
சிறுவர்களின் வாழ்வை மகிழ்ச்சியான களமாக மாற்றியமைப்பது நம் எல்லோரினதும் கடமையாகும். அவர்களுக்கான மகிழ்களத்தை அமைத்துக் கொடுப்பதே நாம் அவர்களுக்குச் செய்யும் பேருதவியாகும். இன்றைய சிறுவர்களை நாளைய தலைவர்களாக மாற்றிமைக்கக் கூடிய சக்தியாக நாம் எல்லோரும் முன்னின்று ஓர் உந்து கோலாகச் செயற்பட வேண்டுமென இந் நிகழ்வில் பிரதம விருந்தினராக் கலந்து கொண்ட மகளிர் அபிவிருத்தி நிலையப் பணிப்பார் சரோஜா சிவசந்திரன் தெரிவித்தார்.
வடமாகாணத் தோ்தலும் பெண்களின் பங்களிப்பும்
யாழ்.குடாநாட்டில் பெண்களின் அரசியல் பங்களிப்பு என்பது காலத்தின் தேவையாகவுள்ளது. அதுவும் தமிழ் பெண்கள் சமூகத்தில் பொது மக்களுடன் தொடர்பு கொள்வது என்பது பெரிய விடயமாகும். பெண்களுக்கு வாக்குரிமை மட்டுமே என்ற நிலைப்பாட்டிலிருந்து பெண்களும் அரசியல் செயல்பாடுகளில் முன்னேற முடியும் என்பதற்கு ஓர் எடு்த்துக் காட்டாக 3ஆம் உலக நாடுகளிலேயே முதன்முதலில் பெண்களுக்கு வாக்குரிமை வழங்கிய நாடு முதல் பெண் பிரதமரைக் கொண்ட நாடு என்று பெருமைப்படும் அளவிற்கு ஏனைய பெண்கள் முன்னேறவில்லை.
சமூக சிந்தனையை பெண்கள் ஏற்படுத்திக் கொள்வதே பெரும் சிரமாமாக இருக்கும். பாரம்பரியத்திலிருந்து வந்த நாம் இன்று பல்வேறு துறைகளில் முன்னோடியாக பெண்களைக் கொண்டிருக்கின்றோம். பெண் தலைமைத்துவ குடும்ப மரபை தற்போதைய சூழ்நிலையில் நாம் பெருமளவில் கொண்டிருக்கின்றோம். ஆனால் அரசியல் பிரவேசங்களில் பெண்களின் பங்கு மிகக் குறைந்தளவிலேயே காணப்படுகின்றது.
இந்த நிலையில் அரசியல் துறையில் பெண்கள் ஆர்வம் கொண்டு தம்மை இணைத்துக் கொள்வது பல யதார்த்தங்களை வெளிக் கொணர உதவும் அதிலும் பெண் பற்றிய அக்கறை கொண்ட பெண்களால்த் தான் இத்தகைய ஓர் மாற்றத்தினை ஏற்படுத்த முடியும். இன்றைய சூழலில் அரசியலில் பெண்கள் முழு வீச்சில் ஈடுபடாமைக்கு போதிய ஆளணி ப்றறாக்குறை, தகுந்த பாதுகாப்பின்மை, முடிவெடுக்கும் தகுதியை பெற்ற பெண்களின் வீத அதிகரிப்பின்மை போன்றனவும் சில காரணிகளாகும். பெண்கள் சமூகத்தின் முக்கிய பங்காளிகள் என்பது எல்லா விதத்திலும் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும். சமூக யதார்த்தத்திலிருந்து பல்வேறு கோணங்களில் பெண்களின் பிரச்சினைகள் அணுகப்பட்டு ஆழமான சிந்தனையில் வழமான பெண்கள் சமுதாயத்தை எதிர் பார்த்து கட்டமைக்கப்படுவது அல்லது முன்வைக்கப்படுவது அவசியமாகும். பெண்களின் அரசியல் பிரவேசம் காலத்தின் தேவையாகக் கருதப்படுகிறது. தற்போதைய சூழ்நிலைகளில் உள்ளுராட்சி தேர்தலி்ன் போது பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு விகிதம் அதிகரிக்கப்பட வேண்டும். யுத்தத்தின் பின்னரான குடாநாட்டின் பின்ணணியில் பெண் தலைமைத்துவம் அதிகரித்துள்ள நிலைகளில் இவர்களின் சுகாதாரம், போசாக்கு உரிமைகள், வாழ்வாதார அடிப்படைப் பிரச்சினை போன்றவற்றையும் கவனிக்கப்பட வேண்டியவையே. மாறும் சூழ்நிலைகளில் மனிதாபிமானத் தேவைகளை எதிர் கொள்ளவும் மூன்று நகரசபைக்கான 29 வேட்பாளர் தெரிவுக்கும், 16 பிரதேச சபைக்கான 210 வேட்பாளர் தெரிவுக்கும் பெண் வேட்பாளர்களின் பங்களிப்பு அதிக பட்சம் 3.2 விகிதமாக இருந்தால் பெண்களின் அபிலாசைகளைப் பூர்த்தி செய்யக் கூடிய வகையில் அமையும்.
நடைபெறவிருக்கும் உள்ளுராட்சித் தேர்தலில் பெண் வேட்பாளர்கள் தாம் தெரிவு செய்யும் அரசியல் கட்சிகளில் போட்டியிடுவதற்கான தகுதியை உறுதிப்படுத்த வேண்டும். பெண்கள் கூடிய எண்ணிக்கையில் போட்டியிடுவார்களானால் புதியதோர் இலக்கை அடைய முடியும். கட்சிகள் பெண் வேட்பாளர்களைச் சேர்த்துக் கொள்ளாதவிடத்து பெண்கள் அக்கட்சிகளுக்கு வாக்களிப்பது அர்த்தமற்றதாகிவிடும். எமது பிரதேசத்திற்கு இன்றைய சூழலில் பெண்கள் தொடர்பான சகல பிரச்சினைகளையும் திட்டவாக்கல் கொள்கை அடிப்படையில் விரிவாக்கம் செய்வதற்கு பெண்களால் மட்டுமே முடியும் எனவே அரசியலில் நுழைவதற்கான சந்தர்ப்பத்தைப் பெண்கள் தவறாது பயன்படுத்துமாறு கேட்டுக் கொள்கின்றோம்.